எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தினூடாக, அமரர் பாக்கியம் சின்னத்துரை அவர்களது 24வது நினைவு ஆண்டினை முன்னிட்டு அவரது பிள்ளைகளான திரு.ஐங்கரன் சின்னத்துரை, மற்றும் புலம்பெயர்ந்து UKல் வசிக்கும் அவரது மகள் திருமதி.சாந்தி அவர்களால் வழங்கப்பட்ட நிதியில், கருவி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பரிந்துரைக்கு அமைய முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கால்கள் இயங்குநிலையிழந்த ஒருவருக்கு அவரது அன்றாட செயற்பாடுகளுக்காக சக்கரநாற்காலி ரூபா 15000/= செலவில் வழங்கிவைக்கப்பட்டது!
தமது தாயாரின் நினைவு நாளை புனிதபடுத்தி இருக்கும் அவரது மகள் சாந்தி அவர்களுக்கும், மகன் ஜங்கரன் அவர்களுக்கும் எமது சங்கம் சார்பான நன்றிகள்! இவர் தனது முயற்சியில் எமது சங்கத்திற்கு பலதரபட்ட உதவித்திட்டங்களுக்கான நிதியை திரட்டிதருபவர் என்பதும் குறிப்பிடதக்கது! நீண்டகாலம் நோய் நொடியின்றி தாயாரின் ஆசிகளோடு வாழ பிரார்த்தித்து நிற்கிறோம்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.