மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த கணித ஆசிரியர் அமரர் த.பூ.முருகையா அவர்களின் முதாம் ஆண்டு நினைவு தினத்தை
புதிய மகாஜனன் இளைஞர்கள்-ரொன்டோ கனடா அமைப்பினர் தெல்லிப்பழையில் ஏப்பிரல் 3ம் திகதி மிகவும் சிறப்பாக நடாத்தினர்.
இந் நிகழ்வில் அமரர் த.பூ.முருகையா அவர்களின் சாபகார்த்மாக, எமது சங்கத்தின் "உயர்த்தும் கரங்கள்" செயற்திட்டத்தினூடாக, "புதிய மகாஜனன் இளைஞர்கள் ரொரன்டோ கனடா" அமைப்பின் நிதியில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 81 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டதுடன் புதிய வங்கி கணக்கும் ஆரம்பிக்கபட்டு குறிப்பிட்ட நிதி வைப்பிலபட்டது! தொடர்ந்தும் ஆண்டுதோறும் இம்மாணவர்களுக்கு அவ் அமைப்பினூடாக நிதி வைப்பிலபடவுள்ளதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்பு பெறுபேறுகளுக்கு அமைய நிதிவைப்பிலபடவுள்ளது!
இன்றைய நிகழ்வுக்கு விருந்தினராக திருமதி சிவமலர் அனந்தசயனன் (ஓய்வுநிலை அதிபர், தெல்லிப்பழை மகஜானக கல்லூரி) அவர்களும், மகாஜனன் திரு.நாகேந்திரன் (மகாஜனன், ஓய்வுநிலை பொதுமுகாமையாளர் (தெல்லிப்பழை ப.நோ.கூ.ச) அவர்களும், தோதரை அம்மன் ஆலய சிவாச்சாரியார் அவர்களும், கிராம சேவகர், தெல்லிப்பழை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி அவர்களும் கலந்து கொண்டனர்! இன்றைய நிகழ்வு ஒழுங்கமைப்பிற்கு தெல்லிப்பழை துர்க்கா இளைஞர் கழகத்தினர் ஆதரவு வழங்கியிருந்தனர்! அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
ஏற்கனவேஇளவாலை, பன்னாலை, கீரிமலை, மாவிட்டபுரம், வித்தகபுரம், கருகம்பனை பகுதிகளைச் சேர்ந்த 161 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் வங்கிகண்குகள் ஆரபித்து வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது!
இத்தகய உன்னத செயற்திட்டத்தில் எம்முடன் இணைந்த மகாஜனன்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.