இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
எமது சங்கத்திற்கு இளவாலை மெய்கண்டான் பாடசாலை அதிபர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலைகளுக்கான சுகாதார அறை நிர்மாணிக்கவேண்டியதன் பிரகாரம், புதிய சுகாதார அறை ஒன்றை அமைப்பதற்காக எமது சங்கத்தினால் ரூபா 50,000/= வழங்கிவைக்கப்பட்டது!
இதற்கான நிதி எமது சங்கத்தின் சேமிப்பில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது!!!
இன்றையதினம் கனடா நாட்டில் பிறந்தநாளை கொண்டாடும் திருமதி திருமலர் ஜெகதீசன் அவர்கள் தனது பிறந்தநாளையடுத்து எமது சங்கத்திற்கு வழங்கிய ரூபா 20,000/= இலிருந்து அவரின் விருப்புக்கமைய கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர்சுவாமிகள் முதியோர் இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது!
தனது பிறந்தநாளை பெறுமதியாக்கியிருக்கும் திருமதி திருமலர் அவர்களுக்கு எமது சங்கம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
கடந்த காலங்களில் எமது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பெரும் எடுப்பில் பிரமாண்டமாக நடைபெறுவது தாங்கள் அறிந்தமையே! ஆயினும் தற்போதைய COVID-19 இடர் நிலையை கருத்தில் கொண்டு மட்டுபடுத்தபட்டளவில் ஆண்டுநிறைவு நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளோம்!
அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு விளான்சந்தி -சேந்தான்குளம் பிரதான விதியின் இரு மருங்கிலும் மரம் நடுகை செய்யும் திட்டத்தின் ஆரம்பமாக வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு.ஜெபநேசன் அவர்களினால் மரம்நடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது! அடுத்துவரும் காலங்களில் வீதியில் ஏனைய மரங்கள் நடுகை செய்யபடவுள்ளது!
மேலும் இன்று மாலை கரும்கபனை கலாசார மண்டபத்தில் மட்டுபடுத்த பட்டளாவிலான ஆண்டுநிறைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது!
எமது சங்கத்தினால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின் வரிசையில் இந்த ஆண்டும் மழைகாலமாகிய இத்தருணத்தில் மழைநீர்தேங்கி நிற்பதினூடு டெங்கு எனும் கொடிய நோய் பரவுவதற்கான அபாயநிலமையை கருத்தில் கொண்டு இளவாலை கிராமத்தை முழுமையாக உள்ளடக்கி மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு தயாராகி இருக்கிறோம்! இதற்கு கிராம மக்களின் பாரிய ஒத்துழைப்பினையும் எதிர்பார்த்துநிற்கின்றோம்! அந்த வகையில் எதிர் வரும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளவாலை மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகள், காணிகள் தோறும் இருக்கின்ற நீர்தேங்க கூடிய கழிவுப்பொருட்களான சிரட்டைகள், இளநீர்கோம்பைகள் பழைய டயர்கள், பிளாத்திக்கு பொருட்கள் தகரப்பேணிகள் என்பவற்றை சேகரித்து வீட்டுமுன்றல்களில் பொதி செய்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!(இதன் போது உக்ககூடிய பொருட்களை தனியேயும், உக்காத பொருட்களை வேறுபடுத்தி பொதிசெய்தும் வைக்கவும்)
எமது உறுப்பினர்கள் வலிவடக்கு பிரதேச சபையின் வாகனங்களினூடாக கிராமத்தவர்களின் வீடுகள்தோறும் சென்று குறித்த பொதிகளை சேகரித்து உரிய முறையில் அப்புறபடுத்துவதற்காக வலிவடக்கு பிரதேச சபையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்!
அன்றையதினம் கிராமத்திலுள்ள பொது இடங்களிலும் எமது உறுப்பினர்கள் நீர்தேங்க கூடிய பொருட்களை சேகரிக்கவுள்ளனர்!
எமது கிராமத்தில் இருந்து டெங்கு எனும் உயிர்கொல்லி அரக்கனை முழுமையாக ஒழிக்கும் எமது முயற்சிகளுக்கு கிராமத்தவர்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்கிறோம்! இது தொடர்பான அறிவித்தல்கள் கிராமத்தவர்களுக்கு நகரும் ஒலிபெருக்கி வாயிலாக நாளை அறிவிக்கப்படவுள்ளது!
எமது சங்கத்தின் 'உயர்த்தும்கரங்கள்' செயற்குழுவிற்கு பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் அமரர் லோகநாதன் அவர்களின் குடும்பத்தினரால் அவரது 71வது பிறந்தநாளையடுத்து வழங்கப்பட்ட 30,000/= ரூபாவிலிருந்து கிளிநொச்சி விசேட தேவையுடையோர் வலையமைப்பிற்கு ரூபா 15000/= வழங்கி்சிறப்பு உணவு வழங்கியதுடன், இளவாலை கிராமத்தை சேர்ந்த கடும்மழையாலும் வெள்ள இடராலும் பாதிக்கப்பட்ட நலிவான பொருளாதார சூழல்கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கபட்டது! மிகுதி நிதியிலிருந்து நாளையதினமும் மேலும் சில குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது!
அமரத்துவமைடந்த தமது குடும்பத்தலைவரின் பிறந்தநாளினை அர்த்தமுள்ளதாக்கிய அவரது மனைவி கலா லோகநாதன் அவர்களுக்கு எமது சங்கம்சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தெல்லிப்பழை இளைஞர் கழக சம்மேளனத்தலைவர் திரு.வஜிந்தன் அவர்களின் தாயாரான அமரர் தேவச்சந்திரன் செல்வராணி அவர்களின் 31ம் நினைவுநாளினையடுத்து, அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட மதிய உணவுகள் எமது சங்கத்தினரால் அவரது 31வது நினைவுநாளன்று (20-09-2020) வழங்கிவைக்கப்பட்டது!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.