எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவிற்கு கிளிநொச்சிமாவட்டம் வன்னேரிகுளம் பகுதியில் இருந்து கிடைக்கப் பெற்ற வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் குடிநீர் வசதியைப்பெற்றுக் கொள்வதில் உள்ள சிரம நிலமை உறுதிசெய்யப்பட்டது! சுமார் 50 குடும்பங்கள் மிகத் தொலைதூரம் சென்று குடிநீர்தேவையை பூர்த்தி செய்கின்ற அவல நிலமையை கருத்தில் கொண்டு, திருமதி மனோகரி செல்லமுத்து அவர்கள் எமது சங்கத்திற்கு வழங்கிய நிதியின் மூலமாக, குழாய்பொருத்தல் , நிர்மாண செலவுகளை குறைக்கும் முகமாக எமது உறுப்பினர்களே செயற்பட்டு ரூபா 285,000/= செலவில் குடிநீர் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது!
குறித்த நீர்வழங்கல் அப்பிரதேச மக்களின் ஏற்பாட்டில் எமது உறுப்பினர்களை அழைத்து கிராமத்தவர்கள் திறந்துவைக்கும்
திட்டமானது இன்று இடம்பெற்றது! தமது நீண்ட நாள் சிரமத்தை தீர்க்க உதவிய எமது சங்க உறுப்பினர்களுக்கு கிராமத்தவர்கள் நன்றிபாராட்டினர்!
இவ் உன்னத செயற்திட்டத்திற்கு நிதிபங்களிப்பினை வழங்கிய கொழும்பில் வசிக்கும் திருமதி மனோகரி செல்லமுத்து அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.