இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள்
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவிற்கு கிளிநொச்சிமாவட்டம் வன்னேரிகுளம் பகுதியில் இருந்து கிடைக்கப் பெற்ற வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் குடிநீர் வசதியைப்பெற்றுக் கொள்வதில் உள்ள சிரம நிலமை உறுதிசெய்யப்பட்டது! சுமார் 50 குடும்பங்கள் மிகத் தொலைதூரம் சென்று குடிநீர்தேவையை பூர்த்தி செய்கின்ற அவல நிலமையை கருத்தில் கொண்டு, திருமதி மனோகரி செல்லமுத்து அவர்கள் எமது சங்கத்திற்கு வழங்கிய நிதியின் மூலமாக, குழாய்பொருத்தல் , நிர்மாண செலவுகளை குறைக்கும் முகமாக எமது உறுப்பினர்களே செயற்பட்டு ரூபா 285,000/= செலவில் குடிநீர் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது!
குறித்த நீர்வழங்கல் அப்பிரதேச மக்களின் ஏற்பாட்டில் எமது உறுப்பினர்களை அழைத்து கிராமத்தவர்கள் திறந்துவைக்கும்
திட்டமானது இன்று இடம்பெற்றது! தமது நீண்ட நாள் சிரமத்தை தீர்க்க உதவிய எமது சங்க உறுப்பினர்களுக்கு கிராமத்தவர்கள் நன்றிபாராட்டினர்!
இவ் உன்னத செயற்திட்டத்திற்கு நிதிபங்களிப்பினை வழங்கிய கொழும்பில் வசிக்கும் திருமதி மனோகரி செல்லமுத்து அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
எமது சங்கத்தின் உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு, கிளிநொச்சி மாவட்டம் செஞ்சோலை மாதிரி கிராமத்தில் சுமார் 20-25 குடும்பங்களுக்கு நீர் வசதியின்மை குறித்த கிடைத்த வேண்டுகோளின் பிரகாரம் ரூபா நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் செலவில் (450,000) நீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!
கடந்த ஆண்டு COVID-19 தொற்றினால் லண்டன் நகரில் உயரிழந்த அமரர் சுப்பிரமணியம் சிவானந்தன், மற்றும் சுப்பிரமணியம் உலகநாதன் ஆகியோரின் குடும்பத்தினர் வழங்கிய நிதி பங்களிப்பில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
சுமார் 25குடும்பங்களைச்சேர்ந்த 100 பேர் பயன்பெறக்கூடிய வகையில் குழாய்கிணறு அமைத்து, அதிலிருந்து மின்னியந்திர பம்பி மூலம் 5000L நீர்தாங்கிக்கு நீர் நிரப்பி குடிநீர் வசதியோடு, இதர தேவைகளை பூர்த்தி்செய்யும் வகையில் நீர் தொட்டி அமைத்தும், அதற்கான மறைப்பு சுற்றுவேலிகள் அமைத்தும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது!
நிர்மாண பணிகளில்,ஆளணி செலவுகளை இயன்றளவு குறைக்க, எமது சங்க உறுப்பினர்கள் நீர்பம்பி,குழாய் பொருத்தும் பணிகளில் ஈடுபட்டதுடன், கட்டட நிர்மாண பணிகளுக்கு அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் குறைந்த செலவில் பணிபுரிந்தார்கள்!
அமரர் சு.சிவானந்தன் அவர்களின் 1வது நினைவு நாளான இன்றையதினம் (05-05-2021) இந்நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்டது!
இதற்கான நிதிபங்களிப்புக்களை வழங்கிய அமரர்களது குடும்பத்தினருக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு, அமரர் சு.சிவானந்தன் மற்றும் சு.உலகநாதன் ஆகியோரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறோம்!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு எமது கிராமத்தை சேர்ந்த க.சசிகுமார் ( ஆசிரியர் புனித ஹென்றியரசர் கல்லூரி) அவர்கள் வழங்கிய நிதியிலிருந்து,
கிளிநொச்சி மாவட்டத்தில், தந்தையை போரில் இழந்த நிலையில், தாயாரும் ஒரு காலை போரில் இழந்த நிலையில், உளநலம் பாதிக்க பட்ட சகோதரி ஒருவருடன்,மிக நலிவான சூழலில் வசித்துவரும் மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லவும் மற்றும் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்காகவும் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது!
இதனை எமது சங்க உறுப்பினர்கள்நேரில் சென்று வழங்கிவைத்தனர்!
இதற்கான நிதி நன்கொடையை வழங்கி வைத்த சங்க நலன்விரும்பி திரு சசிக்குமார் அவர்களுக்கு சங்கம் சார்பான நன்றிகள்!!!
எமது சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்திற்கு கிடைத்த வேண்டுகோளுக்கு இணங்க குடும்பத்தலைவர் கைகால்கள் சரியாக இயங்கமுடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டு தொழில்களுக்கு செல்ல முடியாத நிலையில் 2 பிள்ளைகளோடு அன்றட செலவுகளுக்கே பெரிதும் போரடும் பொருளதார நலிவான குடும்பம் ஒன்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்து வாழ்வாதாரமாக கோழி வளர்ப்பிற்கு 35 கோழிகளும் கோழிக்கும் என ரூபா 35000/= செலவில் வழங்கி வைக்கப் பட்டது!
இதற்கான நிதியினை எமது சங்கத்திற்கு பலதடவைகள் நிதியூக்கிவிப்பு செய்துவரும் புலம்பெயர் உறவான திரு.கஜீபன் கண்ணதாசன் அவர்கள் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
எமது சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்தினூடாக, மிகவும் நலிவான பொருளாதார குடும்ப சூழ்நிலையில் மருத்துவபீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர் ஒருவர், தனது மருத்துவகல்வியை தொடர இதயதுடிப்புமானி பெற்றுக்கொள்ள முடியாத பொருளாதார சூழலையடுத்து ரூபா 26000/= பெறுமதியான(Littmann Classic 3 Made In Usa) இதயத்துடிப்புமானி வழங்கிவைக்கப்பட்டது! ஏற்கனவே இம் மாணவருக்கு எமது சங்கத்தினூடாக ரூபா 144,000/= பெறுமதியான மடிக்கணனி வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இதற்கான நிதியினை திருமதி சுமதி(லண்டன்) அவர்கள் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த கணித ஆசிரியர் அமரர் த.பூ.முருகையா அவர்களின் முதாம் ஆண்டு நினைவு தினத்தை
புதிய மகாஜனன் இளைஞர்கள்-ரொன்டோ கனடா அமைப்பினர் தெல்லிப்பழையில் ஏப்பிரல் 3ம் திகதி மிகவும் சிறப்பாக நடாத்தினர்.
இந் நிகழ்வில் அமரர் த.பூ.முருகையா அவர்களின் சாபகார்த்மாக, எமது சங்கத்தின் "உயர்த்தும் கரங்கள்" செயற்திட்டத்தினூடாக, "புதிய மகாஜனன் இளைஞர்கள் ரொரன்டோ கனடா" அமைப்பின் நிதியில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 81 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டதுடன் புதிய வங்கி கணக்கும் ஆரம்பிக்கபட்டு குறிப்பிட்ட நிதி வைப்பிலபட்டது! தொடர்ந்தும் ஆண்டுதோறும் இம்மாணவர்களுக்கு அவ் அமைப்பினூடாக நிதி வைப்பிலபடவுள்ளதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்பு பெறுபேறுகளுக்கு அமைய நிதிவைப்பிலபடவுள்ளது!
இன்றைய நிகழ்வுக்கு விருந்தினராக திருமதி சிவமலர் அனந்தசயனன் (ஓய்வுநிலை அதிபர், தெல்லிப்பழை மகஜானக கல்லூரி) அவர்களும், மகாஜனன் திரு.நாகேந்திரன் (மகாஜனன், ஓய்வுநிலை பொதுமுகாமையாளர் (தெல்லிப்பழை ப.நோ.கூ.ச) அவர்களும், தோதரை அம்மன் ஆலய சிவாச்சாரியார் அவர்களும், கிராம சேவகர், தெல்லிப்பழை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி அவர்களும் கலந்து கொண்டனர்! இன்றைய நிகழ்வு ஒழுங்கமைப்பிற்கு தெல்லிப்பழை துர்க்கா இளைஞர் கழகத்தினர் ஆதரவு வழங்கியிருந்தனர்! அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
ஏற்கனவேஇளவாலை, பன்னாலை, கீரிமலை, மாவிட்டபுரம், வித்தகபுரம், கருகம்பனை பகுதிகளைச் சேர்ந்த 161 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் வங்கிகண்குகள் ஆரபித்து வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது!
இத்தகய உன்னத செயற்திட்டத்தில் எம்முடன் இணைந்த மகாஜனன்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!
கடந்த ஆண்டு COVID-19 தொற்றினால் இறைபதமடைந்த லண்டனில் புலம்பெயர்ந்து வசிக்கும் அமரர் சுப்பிரமணியம் உலகநாதன் அவர்களின் 1வது நினைவு நாளில் அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியிலிருந்து யாசகம் செய்வோர், மற்றும் தேவையுடையோர் பலருக்கு மதிய உணவு மற்றும் உடைகள், பாய்கள் என்பன வழங்கப்பட்டது!
தமது குடும்ப தலைவரின் நினைவுநாளில் இவ் உன்னதபணியில் இணைந்த அவரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்தின் கீழ் கணவனை பிரிந்து மிகவும் நலிவான குடும்ப பொருளாதார சூழலில் இரு பெண்பிள்ளைகளோடு வாழ்ந்துவரும் பெண் தலமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு எமது சங்கத்தால் ஏற்கனவே குழாய் கிணறு அடித்துக்கொடுக்கப்பட்ட நிலையில், அதில் நீர் பெற்றுக்கொள்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர் நிலமையைக் கருத்தில் கொண்டு ரூபா 40,000/= செலவில் மின் மோட்டார் (கீழ் இருந்து நீர் இறைக்கும்) மற்றும் குழாய் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது!
இதற்கான நிதியினை யாழ்பாணம் மார்ட்டின் வீதியை சேர்ந்த அமரர் அல்பிரட் றிச்சட் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், யாழ்பாணம் மார்ட்டின் வீதியை சேர்ந்த பிரான்சில் வசித்த அவருடைய மனைவி அமரர் றிச்சட் பேபி சறோஜா அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டும் அவர்களது குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்!
அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவிதுக்கொள்கிறோம்!!!
எமது சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்திற்கு கிடைத்த வேண்டுகோளின் பிரகாரம் கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர் ஒருவரின் நலிவான குடும்ப பொருளாதார சூழலை உறுதி செய்து ரூபா 144,000/= பெறுமதியான புதிய மடிக்கணனி வழங்கிவைக்கப்பட்டது! குறித்த மாணவருக்கு துடிப்பு மாணியும் தேவைப்படும் நிலையில் விரைவில் (26000/= பெறுமதியான) இதய துடிப்புமாணி (stethoscope) வழங்க தயாராகிறோம்!
இதற்கான நிதியினை திருமதி சுமதி (லண்டன்) அவர்கள் வழங்கியிருந்தார்! அவருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்திட்டத்திற்கு அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார் அவர்களின் நினைவாக வழங்கிய நிதியிலிருந்து கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் பகுதியில் தேவையுடைய மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி(21,000/=) ஒன்றும், மற்றும் கிளிநொச்சி வலைப்பாடு பகுதியைச்சேர்ந்த 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்(19,000/=),மற்றும் கிளிநொச்சி மகாதேவா முதியோர் இல்லத்திற்கும்(20,000/=), மற்றும் முல்லைத்தீவு அன்பு இல்லத்திற்கும்(15000/=) விசேட சிறப்பு உணவும் வழங்கப்பட்டது!
அமரரது நினைவுநாளில் இத்தகைய உன்னத பணியில் இணைந்த அன்புள்ளங்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!
தவக்காலத்தை முன்னிட்டு தமது முன்னோர்களின் நினைவாகவும் அவர்களது ஆத்மாசாந்திக்காகவும் பெயர் குறிப்பிட விரும்பாத சங்க நலன் விரும்பி ஒருவர் வழங்கிய நிதியில் 20 மாணவர்களிற்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது!
நிதிநன்கொடையாளருக்கு எமது சங்கம் சார்பான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறோம்!!
எமது சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' விசேட செயற்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் வேண்டுகோளிற்கிணங்க கட்டுவன் மேற்கு மற்றும் வசாவிளான் மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணவனை இழந்த இரண்டு குடும்பங்களுக்கான ஒரு மாதத்திற்கான உலர் உணவு மற்றும் குழந்தை களுக்கான பால்மா பொருட்கள் என்பன தலா 10000 ரூபா வீதம் இரண்டு குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டன. இவர் களுக்கான உலர் உணவு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு எம்மால் வழங்கப்படும் திட்டத்தின் படி 3வது மாதமாக இம்முறை வழங்கப்பட்டது!. இதற்கான நிதியினை
Melbourne boys Australia வழங்கியிருந்தார்கள்.
அவர்களுக்கு எமது சங்கம் சார்பான நன்றிகள்!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.